நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :22 அக்டோபர் 2018, 3:57 pm IST

புது தில்லி: ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞரான  ராகேஷ் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்தாவது:

ஆணின் திருமண வயது என்பது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வாக்குரிமையைச் செலுத்தவும், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சேரவும் குறைந்த பட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, திருமணத்திற்கு மட்டும் ஏன் 21 ஆகி இருக்க வேண்டும்? எனவே ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது இதுதொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரிக்கலாம்; ஆனால் இதை பொதுநல வழக்காக தாக்கல் செய்வது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், ராகேஷ் பாண்டேவுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.