ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் பேரவைத் தேர்தல்களில், பாஜக சார்பில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக உள்ள பலருக்கு அக்கட்சி மீண்டும் வாய்ப்பளிக்காது என்று கூறப்படுகிறது.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச பேரவைக்கு நவம்பர் 28-ஆம் தேதியும், 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் பேரவைக்கு டிசம்பர் 7-ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 2003-இல் இருந்து பாஜக ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலத்திலும், ராஜஸ்தானிலும் ஆளும் கட்சி மீது அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே, புது முகங்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் இந்த அதிருப்தியை சமாளிக்க முடியும் என்று பாஜக கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் பாஜக சார்பில் எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் குறித்து கட்சியினரிடமும், இதர தரப்பினரிடமும் கருத்துகள் கோரப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். மக்களிடம் நற்பெயர் இல்லாத எம்எம்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

