டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாஜகவின் இரக்கத்தினால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை: அமித் ஷாவிற்கு பினரயி விஜயன் பதிலடி 

பாஜகவின் இரக்கத்தினால் ஒன்றும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாஜக தேசியத் தலைவர்  அமித் ஷாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:10 pm

DIN

திருவனந்தபுரம்: பாஜகவின் இரக்கத்தினால் ஒன்றும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாஜக தேசியத் தலைவர்  அமித் ஷாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் பதிலளித்துள்ளார்.

ஒரு நாள் பயணமாக  கேரளாவிற்கு பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா சனிக்கிழமையன்று வந்திருந்தார். கண்ணூரில் கட்சி அலுவலக திறப்பு விழா உள்ளிட்ட சில நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது:

சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்திவரும் பக்தர்களுக்கு எதிராக போலீஸ் படையை மாநில கம்யூனிஸ்ட் அரசு பயன்படுத்துகிறது. போராட்டத்தை ஒடுக்கும் செயலில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட்டால்,அதற்காக பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். ஆட்சியைக் கூட இழக்க நேரிடும்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார். 

இந்நிலையில் பாஜகவின் இரக்கத்தினால் ஒன்றும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை என்று பாஜக தேசியத் தலைவர்  அமித் ஷாவின் விமர்சனத்திற்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று செய்தியாளர்களிடம அவர் பேசியதாவது:

கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசானது பாரதிய ஜனதா கட்சியின் இரக்கத்தினால் ஒன்றும் ஆட்சிக்கு வரவில்லை.  கேரள மக்களின் ஆதரவினால்தான்  அதிகாரத்திற்கு வந்துள்ளோம் 

உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த செயல்படுகிறோம் என்பதற்காக ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசையே மிரட்ட  பாஜக தேசியத் தலைவர் துணிந்துள்ளார்

அரசியலமைப்பு அளித்த அடிப்படை உரிமைகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகத்தான்  எங்களது அரசு மிரட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.