தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்: பாஜக எம்எல்ஏவின் மகன் கைது

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் எம்எல்ஏவின் மகனை போலீஸார்

Updated On :3 செப்டம்பர் 2018, 9:10 pm


ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் எம்எல்ஏவின் மகனை போலீஸார் கைது செய்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தாமோ மாவட்டத்துக்குச் சென்று காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்க சிந்தியா திட்டமிட்டுருந்தார். 
இந்நிலையில் தாமோ மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏவான உமா தேவி காதிக்கின் மகன் பிரின்ஸ் தீப் (19), முகநூலில் ஒரு பதிவிட்டார். அதில், தாமோ மாவட்டத்தில் உள்ள தங்கள் தொகுதிக்குள் சிந்தியா வந்தால், அவர் சுட்டுக் கொல்லப்படுவார்' என்று தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனுராக் வர்த்தன், காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, பிரின்ஸ் தீப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரின்ஸ் தீப்பை அவரது தாயாரும், எம்எல்ஏவுமான உமா தேவி காதிக், திங்கள்கிழமை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மை முகத்தைக் காட்டுவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.