புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நாகாலாந்து: வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.800 கோடி நிதியுதவி: மத்திய அரசிடம் வலியுறுத்தல்

நாகாலாந்து மாநிலத்தில் நடப்பு பருவமழை காலத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட பேரழிவை சீரமைக்க ரூ.800 கோடி நிதியுதவி வழங்க மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக

Updated On :3 செப்டம்பர் 2018, 9:09 pm


நாகாலாந்து மாநிலத்தில் நடப்பு பருவமழை காலத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட பேரழிவை சீரமைக்க ரூ.800 கோடி நிதியுதவி வழங்க மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு செயலாளர் ரொவிலாட்டோ மோர் திங்கள்கிழமை தெரிவித்தார். 
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: நாகாலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பேரிடரால் மொத்த மக்கள் தொகையில் 13.19 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 48,821 குடும்பங்களும், 532 கிராமங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 5408.57 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது. 
இந்த பருவமழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில், மக்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்ததுடன், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 
குறிப்பாக மாநிலத்தின் தலைநகராகிய கொஹிமா மற்றும் சென்சாங்க், கிப்பியர் மற்றும் பெக் மாவட்டங்கள் மழை சேதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
சென்சாங்க், கிப்பியர் மற்றும் பெக் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஜூலை 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 15 நாட்களாக மாநிலத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பு இன்றி துண்டிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மொத்தம் 359 இடங்களில் சாலைகள் சேதமடைந்தும், பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. 
நாகாலாந்து மாநில பேரிடர் மேலாண்மை குழு (என்எஸ்டிஎம்ஏ) மற்றும் உணவு மற்றும் குடிமை பொருட்கள் வழங்கல் துறையும் இணைந்து விமானம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. மழை வெள்ளத்துக்கு 12 பேர் உயிரிழந்த நிலையில் ஏறத்தாழ 3 ஆயிரம் குடும்பத்தினர் கோடிக்கணக்கான மதிப்புள்ள வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளனர். 
இதனிடையே மத்திய, மாநில அமைச்சர்கள் குழு செவ்வாய்கிழமை முதல் 4 நாட்கள் நேரில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்து மதிப்பீடு தயாரிக்க வருகை தர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.