மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் குடும்ப உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
தில்லியில் உள்ள வாஜ்பாயின் இல்லத்துக்கு சென்று, அவரது குடும்ப உறுப்பினர்களை மோடி சந்தித்துப் பேசினார். சிறிது நேரம் அவர்களுடன் அவர் கலந்துரையாடவும் செய்தார்.
இந்த சந்திப்புத் தொடர்பாக சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், வாஜ்பாய் குடும்ப உறுப்பினர்களுடன் தாம் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் மோடி வெளியிட்டிருந்தார். தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் கடந்த மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல், தில்லியில் முழு அரசு மரியாதையுடன் கடந்த மாதம் 17ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?

உங்களுக்கும் வரலாம் பேரிடர் எச்சரிக்கை ஒலி! பதற்றப்பட வேண்டாம்!!

செஞ்சிக் கோட்டையில் தூய்மை பணி: மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை!

திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

