ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வன்முறை கும்பல் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புல்வாமா மாவட்டத்தின் 12 கிராமங்களில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் வந்தது. அதையடுத்து அந்த பகுதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது, சில இடங்களில் இளைஞர்கள் இணைந்து பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல வைக்கும் எண்ணத்தில் போராட்டக்காரர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்தனர். அதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஃபயாஸ் அகமது வானி என்னும் இளைஞர் உயிரிழந்ததாக அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு

என் சினிமா வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர்: கௌதம் மேனன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

