
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கோவா முதல்வர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், வடக்கு கோவா மாவட்டம், கண்டோலிமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்றன.
எதற்காக பாரிக்கர் அனுமதிக்கப்பட்டார் என்பது தொடர்பான விவரங்களை தெரிவிக்கவில்லை.
சட்டப் பேரவை துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான மைக்கேல் லோபா கூறுகையில், பாரிக்கரை மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார்' என்றார்.
அமெரிக்காவில் நிகழாண்டு தொடக்கத்தில் 3 மாதம் பாரிக்கர் சிகிச்சை பெற்றார். பின்னர் மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். இதையடுத்து, நாட்டுக்கு கடந்த வாரம் அவர் திரும்பி வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






