தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ள குமாரசாமியின் குடும்பம்: எடியூரப்பா 'பகீர்' புகார் 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 3:11 pm IST

பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏவும் அமைச்சருமான மஞ்சு சமீபத்தில் ஹாசன் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் அம்மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் கூறியிருந்தார். அத்துடன் இதுதொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாஜக சார்பாக மாநிலம்  தழுவிய போராட்டங்கள் நடைபெறும் என்று எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

பெங்களூருவில் உள்ள பேலஸ் மைதானத்தில் புதனன்று நடைபெற்ற மாநில பாஜகவின் சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது:

ஹாசன் மாவட்டத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ஆக்கிரமித்துள்ள நிலத்தின் மதிப்பு ரூ. 3000 கோடி ஆகும். இந்தக் குற்றசாட்டு தொடர்பாக குமாரசாமி வாய் திறந்து எதுவும் சொல்லாத காரணத்தால், பொதுப்பணித்துறை அமைச்சரான ரேவண்ணா இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்.   

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.