புதுவையில் புராதான சுற்றுலா, ஆன்மிக சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு சுற்றுலா, பெட்ரோலிப் பொருள்கள் மீதான விற்பனை வரி, மது விற்பனை ஆகியவை மூலம் தான் 32 சதவீத வருமானம் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் புதுவைக்கு வருவாய் மிகவும் பாதிக்கப்படும். புதுவைக்கு உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். அவா்களுக்கு தேவையான சுற்றுலா வசதிகளை செய்துகொடுத்தால் தான் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் புதுவை அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும்.