தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே தெரிந்தவர் அகிலேஷ்: அமர் சிங் கடும் தாக்கு 

தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே தெரிந்தவர் அகிலேஷ் சிங் யாதவ் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சிங் விமர்சித்துள்ளார். 
தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே தெரிந்தவர் அகிலேஷ்: அமர் சிங் கடும் தாக்கு 

ஜான்பூர் (உ.பி): தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே தெரிந்தவர் அகிலேஷ் சிங் யாதவ் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சிங் விமர்சித்துள்ளார். 

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட அமர்சிங்  சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினரான அவர் தற்போது எந்தக் கட்சியினையும் சாராத உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே தெரிந்தவர் அகிலேஷ் சிங் யாதவ் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர் சிங் விமர்சித்துள்ளார். 

ஜான்பூரில் உள்ள டி.டி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்காக அமர் சிங் வருகை தந்திருந்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே அகிலேஷுக்கு தெரியும் என்று கிண்டலாக அவர் விமர்சித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com