பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மக்களவையில் திருநங்கை உரிமைகள் மசோதா நிறைவேற்றம்

மக்களவையில் திருநங்கை உரிமைகள் மசோதா அமளிக்கு மத்தியில் மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2018, 6:01 pm IST


மக்களவையில் திருநங்கை உரிமைகள் மசோதா அமளிக்கு மத்தியில் மக்களவையில் இன்று (திங்கள்கிழமை) நிறைவேற்றப்பட்டது. 

திருநங்கை உரிமைகளை பாதுகாக்கும் மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மக்களவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று சமூக நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பார்வைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாவில் 27 பரிந்துரைகளை நாடாளுமன்ற நிலைக் குழு குறிப்பிட்டது. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் கொண்டுவந்தார். ஆனால், இந்த மசோதாவில் இருக்கும் பிரச்னைகளை குறிப்பிட்டு அதிமுக, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே இந்த மசோதாவின் குறிப்பிட்ட பிரிவுகளில் சீர்த்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தளத்தின் பார்த்ருஹரி மஹ்தப் மற்றும்  திரணமூல் காங்கிரஸ் கட்சியின் காகோலி கோஷ் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், அவை நிராகரிக்கப்பட்டது. 

இதையடுத்து, அமளிக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆண்கள் மற்றும் பெண்கள் அல்லாது திருநங்கை பிரிவில் 4,87,803 பேர் இடம்பிடித்தனர். இது மொத்த மக்கள் தொகையில் 0.04 சதவீதம் ஆகும். 2013-இல், திருநங்கை சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழு கல்வி, உடல் ஆரோக்கியம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் பாகுபாடு பார்ப்பது போன்ற இன்னல்களை திருநங்கைகள் எதிர்கொள்வதாக தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.