புது தில்லி: ராணுவம் என்பது மோடியின் படை என்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
விரைவில் மக்களைவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு படைகளை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தில்லியில் பாஜக பேரணியின் போது விமானப்படை வீரர் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டது. மேலும் பா.ஜனதா வெளியிட்ட ‘நானும் காவலாளி’ விடியோவிலும் ராணுவம் இடம்பெற்றது. இதன் காரணமாக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
இந்நிலையில் ராணுவம் என்பது மோடியின் படை என்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
உ.பி.யில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்தது, ஆனால் மோடியின் ராணுவம் அவர்களுக்கு புல்லட் மற்றும் வெடிகுண்டுகளை பரிசாக வழங்கியது.என்று பேசியிருந்தார்.
இந்திய பாதுகாப்பு படைகள் பிரதமரின் படைகள் கிடையாது. இந்த பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் சமூக வலைத்தளங்களிலும் யோகியின் இந்த பேச்சு பலத்த கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

