விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை  

உத்தரபிரதேசத்தில் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்களை மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2019, 11:58 am IST

லக்னௌ: உத்தரபிரதேசத்தில் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்களை மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தங்களுடைய தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயம் செய்திருந்தது.

ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த 493 வேட்பாளர்கள் ஆணையம் நிர்ணயித்த காலக்கெடுவிற்குள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

இதன் காரணமாக அவர்கள் அனைவரையும் மூன்று ஆண்டுகள் தேர்தல் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

குறிப்பாக முசாபர்நகர் மாவட்டத்தில் மட்டும் 6 வேட்பாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரின் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரமேஷ் சந்த் ராய் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.