சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறை தொடர்பாக நிஜாமாபாத் வேட்பாளரின் வினோத வேண்டுகோள்   

வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக தெலங்கானா   மாநில பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.

Published On :

ஹைதராபாத்: வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக தெலங்கானா   மாநில பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தெலங்கானாவில் உள்ள நிஜாமாபாத் தொகுதி ஒரு வித்தியாசமான காரணத்தால் புகழ்பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்ட 185 வேட்பாளர்களுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 12 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாத்து வைத்திருக்கும் அறை தொடர்பாக நிஜாமாபாத் தொகுதி பாஜக வேட்பாளர் ஒருவர் வினோத வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக நிஜாமாபாத் தொகுதி பாஜக வேட்பாளர் அரவிந்த் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய   வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு நான் கொடுக்கும் பூட்டையும் பயன்படுத்தி பூட்ட  வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது அங்குள்ள அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.