ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் சுதந்திரம் கிடைத்துள்ளது: கங்கனா ரணாவத்

இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். 

Published On :

மக்களவைக்கு 4-ஆவது கட்டமாக, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.

மும்பையில் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்:

நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாவுடன் வந்து வாக்களித்தார். நடிகர்கள் ஷாரூக் கான், சல்மான்கான், ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், சஞ்சய் தத், நடிகைகள் ரேகா, மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் உள்ளிட்டோரும் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.  

இந்நிலையில், இத்தாலிய அரசிடம் இருந்து இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளது என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்தார். இதுதொடர்பாக வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இத்தனை நாட்களாக நம் நாடு முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது. இப்போதுதான் நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதை நான் உணர்கிறேன். எனவே உங்கள் சுதந்திரத்தை காக்க வாக்களியுங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.