புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அவசர முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்: இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அவசர முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2019, 7:32 am

PTI


புது தில்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்த அவசர முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரை திருப்பி அனுப்புவது, வர்த்தக உறவைத் துண்டித்துக் கொள்வது என்று பாகிஸ்தான் எடுத்திருக்கும் முடிவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். உறவை முறித்துக் கொள்வதாக தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவு இரு நாட்டு உறவுகளையும் பாதிக்கும்.

காஷ்மீர் குறித்த முடிவுகள் பாகிஸ்தானுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதில் அச்சரியமில்லை. பாகிஸ்தானின் தன்னிச்சையான முடிவுகள் இரு நாட்டு நல்லுறைவு பாதிக்கும் என்பதால், பாகிஸ்தான் தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் அதிகார வரம்பில் பாகிஸ்தான் தலையிட முற்படுவது ஒரு போதும் சரியாக இருக்காது என்றும் வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.