கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலை பாஜக ஏற்படுத்திவிட்டது: திக்விஜய் சிங் 'திடீர்' கொந்தளிப்பு

பிரிட்டீஷ்காரர்களுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செயல்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:48 am

DIN

பிரிட்டீஷ்காரர்களுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக செயல்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக திக்விஜய் சிங் கூறியதாவது:

ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்க காரணம் பாஜகவா? அல்லது அதற்காக அவர்கள் எதுவும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? அதுபோன்று காஷ்மீரை இந்தியாவின் ஒருபகுதியாக்க ஆர்எஸ்எஸ், பாஜக பங்களிப்பு என்ன? 1947-க்கு மும்பு பிரிட்டீஷுடன் இணைந்து செயல்பட்டது தான் ஆர்எஸ்எஸ். 

குறிப்பாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மகாத்மா காந்தி மேற்கொண்டபோது, அதை ஆர்எஸ்எஸ் தீவிரமாக எதிர்த்தது தான் வரலாற்று உண்மை. அதுமட்டுமல்லாமல் பிரிட்டீஷுக்கு முழு ஆதரவு அளித்து ஹிந்து இளைஞர்கள் அவர்களுடன் இணைய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.  

தேசியத்தை காங்கிரஸ் தான் எப்போதும் போற்றுகிறது. எனவே தேசியவாதம் குறித்து பாஜக எங்களுக்கு எந்த பாடமும் புகட்டத்தேவையில்லை. காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை பெறாமலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது தவறான செயலாகும். இதனால் மிகப்பெரிய பிரச்னைகள் ஏற்படும் நிலை உள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் ஒருபுறம் சீனாவும், மறுபுறும் பாகிஸ்தானும், இன்னொருபுறம் ஆப்கானிஸ்தானும் இருப்பதை மத்திய அரசு மறந்துவிட வேண்டாம். இதுபோன்ற நடவடிக்கைகளால் நாடு மிகவும் இக்கட்டான சூழலிலும், பிரச்னையிலும், சிக்கலிலும் சிக்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.