தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

உத்தரகண்டில் அதீத கனமழை: உத்தரகாசியில் மட்டும் 10 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. உத்தரகாசியில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 10 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2019, 11:06 am IST


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. உத்தரகாசியில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 10 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகாசி மாவட்டத்தில் வீடுகள் இடிந்ததில் 7 பேரும், டேராடூன் மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஒரு பெண்ணும் மாயமாகினர்.

கிளவுட் பர்ஸ்ட் எனப்படும் மேக வெடிப்புப் போன்ற அதீத கன மழையில் சிக்கி உத்தரகாசியில் மட்டும் 10 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

உத்தரகாசியின் மகுடி பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்களும், ஆராகோட் பகுதியில் இருந்து 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 6 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வெள்ளத்தில் மாயமான நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று உத்தரகாசி பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் கூறியுள்ளார்.

மேலும், மாநில அவசர கால நடவடிக்கைகள் மையத்தின் அதிகாரிகள் கூறியதாவது:
உத்தரகாசி மாவட்டத்தின் ஆராகோட், மகுரி, திகோசி உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழையால் வீடுகள் இடிந்தன. இதில் 7 பேர் மாயமாகினர். உத்தரகாசியில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

டேராடூன் மாவட்டத்தில் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில், காரில் சென்ற பெண் அடித்துச் செல்லப்பட்டார். அவரை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு கூடுதலாக மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, சார்தாம் யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது. ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையிலும், கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதேபோல், கைலாஷ்-மானசரோவர் வழித்தடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, அந்த யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.