தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மட்டுமல்ல.. அருண் ஜேட்லியின் சாதனைகள் பல!

மோடியின் முந்தைய மத்திய அமைச்சரவையில் மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தபோது அருண் ஜேட்லி செய்த பல நடவடிக்கைகள், மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமைய உதவியது என்று சொன்னால் அதுமிகையில்லை.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2019, 9:37 am

DIN


மோடியின் முந்தைய மத்திய அமைச்சரவையில் மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்தபோது அருண் ஜேட்லி செய்த பல நடவடிக்கைகள், மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமைய உதவியது என்று சொன்னால் அதுமிகையில்லை.

பொருளாதார அளவில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தவர் அருண் ஜேட்லி. மோடியின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளின் முதுகெலும்பாக இருந்தவரும் அருண் ஜேட்லிதான்.

அதில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள் இதோ..

ஆண்டு தோறும் பொது பட்ஜெட் என்றாலே அது பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அந்த நடைமுறையை மாற்றி, பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றியவர் அருண் ஜேட்லி.

இந்தியா முழுக்க ஒரு விஷயம் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றால் அது பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் இனி செல்லாது என்று மோடி அறிவித்த பிறகு நாடு சந்தித்த பல இன்னல்களையும், கடினமான காலத்திலும் நாட்டின் நிதித் துறை அமைச்சராக இருந்து கடினமான சூழ்நிலையை கவனமாகக் கையாண்டவர் அருண் ஜேட்லி.

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த, அந்நிய நேரடி முதலீடுகளை கவர பல்வேறு உத்திகளைக் கையாண்டார்.

வாராக் கடனை கண்காணித்து அதனைக் குறைத்து பொதுத் துறை வங்கிகள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்தவர் அருண் ஜேட்லி.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பரிசீலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி முறையை துணிச்சலோடு அறிமுகப்படுத்தி, பல்வேறு தரப்பின் ஆலோசனைகளைப் பெற்று படிப்படியாக அதனை சீர்படுத்தியவர் அருண் ஜேட்லி. 

நாடு முழுக்க ஒரே முறையிலான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தி, அதன் சாதக, பாதகங்கள் அனைத்தையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

பான் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைத்தது, வரி செலுத்த ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாக்கப்பட்டதும் இவர் நிதித்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே.

இதுமட்டுமா? நிதித்துறை சட்டம் இயற்றியது  என பொருளாதாரத்தை  மேம்படுத்த அனைத்து வழிகளையும் மேற்கொண்டவர் அருண் ஜேட்லி என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.