இது தொடர்பாக அவர் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'வெங்காயம், பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையில் அதிவேக உயர்வு ஏற்பட்டுள்ளது என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலைமையே நீடித்தால் பொதுவான குடிமகனுக்கு உயிர்வாழ்வது கடினம். பொருளாதார நெருக்கடியின் உண்மையான விளைவை மக்கள் உணர்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெங்காய திருட்டு சம்பவங்கள் மற்றும் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெறுகின்றன' என்று கூறியுள்ளார்.