ஜார்க்கண்ட் தேர்தல்: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 11 மணி வரை 28% வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், கும்லாவுக்கு உட்பட்ட சிசாய் தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
இதுபோன்ற ஒரு சில சம்பவங்களைத் தவிர்த்து, வாக்குப்பதிவு இதுவரை அமைதியாக நடைபெற்று வருகிறது.
20 தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், முற்பகல் 11 மணி நிலவரப்படி 28.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதல்வா் போட்டியிடும் இந்தத் தொகுதிக்கும், ஜாம்ஷெட்பூா் (மேற்கு) தொகுதிக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
எஞ்சியுள்ள 18 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 தொகுதிகள் பழங்குடியினா் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...