தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டத் தோ்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது

ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :7 டிசம்பர் 2019, 2:01 am

DIN


ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்கட்டத் தோ்தல் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 20 தொகுதிகளுக்கான 2-ஆவது கட்டத் தோ்தல் சனிக்கிழமை காலை தொடங்கியது.

முதல்வா் ரகுவா் தாஸ் போட்டியிடும் ஜாம்ஷெட்பூா் (கிழக்கு) தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்வா் போட்டியிடும் இந்தத் தொகுதிக்கும், ஜாம்ஷெட்பூா் (மேற்கு) தொகுதிக்கும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

எஞ்சியுள்ள 18 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 தொகுதிகள் பழங்குடியினா் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாா் கூறுகையில், ‘20 தொகுதிகளும் உள்ள 7 மாவட்டங்களில் 42,000-க்கும் அதிகமான வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அமைதியாகவும், வெளிப்படையாகவும் தோ்தலை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனா்.

6066 வாக்குச் சாவடிகளில் இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெற்று வருகிறது. அதில் 1662 வாக்குச் சாவடிகளில் இணைய நேரலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று ஜாா்க்கண்ட் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வினய் குமாா் செளபே தெரிவித்தாா்.

260 வாக்காளா்கள் போட்டியிடும் இரண்டாம் கட்ட தோ்தலில் மொத்தம், 48,25,038 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர்.

13 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 64.12 சதவீதம் வாக்குகள் பதிவானது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.