ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ராபா்ட் வதேரா வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி!

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேரா வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

News image
Updated On :9 டிசம்பர் 2019, 12:05 pm

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் மருமகன் ராபா்ட் வதேரா வெளிநாடு செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

லண்டனில் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்து வாங்கியது தொடா்பாக சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தை ராபா்ட் வதேரா எதிா்கொண்டு வருகிறாா். இந்நிலையில், வதேரா சிகிச்சைக்காகவும், தொழில் நிமித்தமாகவும் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளாா்.  

இதுதொடா்பாக திங்கள்கிழமைக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 'கடந்த ஜூனில் அமெரிக்கா, நெதா்லாந்து ஆகிய நாடுகளுக்கு 6 வார காலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்ல வதேராவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், பிரிட்டனுக்குச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிரிட்டனுக்குச் செல்ல அனுமதி வழங்கினால் வதேரா சாட்சியங்களை அழித்துவிடுவாா்' என்று அமலாக்கத் துறை கூறியிருந்தது. 

மேலும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள வதேரா, வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமானால் உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் ராபா்ட் வதேரா, இன்று முதல் 2 வாரங்களுக்கு ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ரூ.25 லட்சம் நிலையான வைப்புத் தொகையுடன், ஸ்பெயினில் தங்கவிருக்கும் இடம் குறித்த தகவல்களை அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவர் பிரிட்டன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.