மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2019, 2:40 pm

DIN


அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மசூதி கட்டிக் கொள்ள உத்தரப் பிரதேசத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய அமைப்புக்கு வழங்குமாறும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.