

இமாச்சலப் பிரதேசத்தில் கடுங்குளிர் நிலவுகிறது. இந்த ஆண்டின் முதல் பனிமழை நேற்று பொழிந்தது. இதனால் மணாலியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மணாலிக்கு அருகே உள்ள ஷிம்லாவும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல பனிமழையால் மூடப்பட்டுள்ளது.
அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸாக நிலவுகிறது. பனிமழை குறித்து செய்திகள் வெளியானதுமே, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஷிம்லாவுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் உள்ள பிரஷார் ஏரியைச் சுற்றிலும் பனிப்படலம் படர்ந்திருக்கும் மிக ரம்மியமான காட்சி இதோ உங்களுக்காக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.