சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜாமியா பல்கலை.யில் துணைவேந்தர் அனுமதிக்காமல் போலீஸார் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்? - குலாம் நபி ஆசாத் கேள்வி

ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:33 pm

DIN

ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது, மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று லக்னோ, மும்பை, ஹைதராபாத், பாட்னா உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், துணைவேந்தர் அனுமதிக்காமல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் தில்லி போலீஸார் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசிய அவர், 'மத்திய அரசுதான் உண்மையான குற்றவாளி. ஒரு சட்டத்தை கொண்டு வருவதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நாடாளுமன்றத்தில் 'செல்வாக்கற்ற' மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி , உத்தரப்பிரதேசம் என பெரும்பாலாக அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இச்சட்டத்தை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை' என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.