சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தில்லியில் மீண்டும் போராட்டம்: 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் போராட்டம் நடைபெற்றதையடுத்து, 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:34 pm

DIN


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் போராட்டம் நடைபெற்றதையடுத்து, 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாபர்பாத் பகுதியில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென போலீஸார் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், போலீஸார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.

இதன் காரணமாக தில்லியில் சீலாம்பூர் - ஜாபர்பாத் இடையேயான சாலை மூடப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் தென்பட்டது. 

இந்நிலையில், தற்போது வடகிழக்கு தில்லி பகுதியில் சீலாம்பூர், கோகுல்புரி, ஜாப்ராபாத் மற்றும் மௌஜ்பூர் - பாபர்பூர் மற்றும் ஷிவ் விஹார் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரயில்கள் குறிப்பிட்ட அந்த 6 ரயில் நிலையங்களில் நிற்காது எனவும் தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாமியா பல்கலைக்கழகம் அருகே நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.