ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கோஷமிட்ட வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

News image
Updated On :19 டிசம்பர் 2019, 12:01 pm

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி கர்நாடகத்தில் இடதுசாரி மற்றும் முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு  இன்று வியாழக்கிழமை (டிச.19) 'பந்த்' அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி பெங்களூரில் பல இடங்களில் போராட்டம் வெடித்தது. இதில், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாவும் கைது செய்யப்பட்டுள்ளார். 

Story image

பெங்களூரு டவுன் ஹால் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பதாகையுடன் கோஷமிட்ட அவரை போலீஸார் இழுத்துச் சென்றனர். அவர் தனது கையில் காந்தி மற்றும் அம்பேத்கர் புகைப்படத்துடன் அரசுக்கு எதிராக பதாகைகளை வைத்திருந்ததாகவும், செய்தியாளர்களிடம் பேசியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

மேலும் அவர் பேசுகையில், 'காவல்துறையினர் மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறார்கள். மத்திய அரசின் ஒரு நடவடிக்கைக்கு, ஒழுக்கமான, நியாயமான வன்முறையற்ற முறையில் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். ஆனால், போலீஸார் வந்தபிறகுதான் வன்முறை உருவாகிறது. அரசியலமைப்பின் மதிப்பினை நாங்கள் நிலைநாட்ட விரும்புகிறோம். எங்களையும், எங்களது குரலையும் அடக்க முடியாது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.