ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு: உள்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 டிசம்பர் 2019, 1:13 pm

DIN


குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌ மற்றும் சாம்பல் பகுதிகளில் இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. தில்லியில் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டது. 

இதனிடையே, போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ், ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர் காலித், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டில் நிலவும் சூழல் குறித்து ஆலோசனை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்தக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா ஆகியோர் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.