கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

குடியுரிமைச் சட்டம்: போராட்டத்தில் ரூ.88 கோடி ரயில்வே சொத்துக்கள் நாசம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையின் போது மத்திய ரயில்வேக்கு சொந்தமான ரூ.88 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:37 pm

DIN

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையின் போது மத்திய ரயில்வேக்கு சொந்தமான ரூ.88 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

"கிழக்கு மண்டலத்தில் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், தென்கிழக்கு மண்டலத்தில் ரூ.13 கோடி, வடகிழக்கு ஃப்ரான்டியர் மண்டலத்தில் மூன்று கோடி மதிப்புள்ள சொத்துக்களும் சேதமடைந்துள்ளன" என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து ரயில்வே இந்த சேத மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

முன்னதாக போராட்டங்களின் போது ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து தனது கடுமையான கருத்துகளை பதிவு செய்த ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, பொது சொத்துக்களை யாராவது சேதப்படுத்தினால், அவர்களை சுட்டுத் தள்ள வேண்டும்' என்று எச்சரித்தார்.

இது வரி செலுத்துவோரின் பணம் என்றும், ஒரு ரயிலை உருவாக்க பல வருடங்கள் ஆகும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.