சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையில் மாபெரும் பேரணி

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் 4வது முறையாக மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் அரசியல் கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

இதற்கு முன்னதாக மூன்று முறை கொல்கத்தாவில் வெவ்வேறு இடங்களில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.