பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததால் பிரதமர் மோடி ஏமாற்றம்

தில்லியில் இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பிரதமர் மோடி ஏமாற்றம் அடைந்தார்.

News image
Updated On :26 டிசம்பர் 2019, 5:31 am

புது தில்லி: தில்லியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றம் அடைந்தார்.

சூரிய கண்ணாடியுடன், சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்த பிரதமர் நரேந்திர மோடி, சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது, வானில் மேகமூட்டம் காணப்பட்டதால், நேரிடையாகப் பார்க்க முடியாமல் வருத்தம் அடைந்தார்.

இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாட்டு மக்களைப் போன்றே நானும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்தேன், மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் போனது, ஆனால், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் தெரிந்த நெருப்புவளைய சூரியகிரகணத்தை நேரலையில் பார்த்தேன். மேலும், நிபுணர்களுடன் உரையாடி சூரிய கிரகணத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.