குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் ரேஷன் நிறுத்தப்படும்: கேரள அரசுக்கு எச்சரிக்கை

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

News image
Updated On :27 டிசம்பர் 2019, 10:19 am

DIN

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்தாவிட்டால் கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்றுள்ள நிலையில், அதற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாஜக செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ணன் பேசியுள்ளார். 

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், 'மத்திய கிழக்கு நாடுகளில் இந்துக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்  குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியிருக்கும்.

கேரளத்தில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டினை அரசு அமல்படுத்தாவிட்டால், அம்மாநிலத்திற்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும். நாட்டில் இயற்றப்படும் அனைத்துச் சட்டங்களுக்கும் அனைவரும் கீழ்ப்படிய வேண்டியது அவசியம். எந்தவொரு மாநிலமும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. மாநிலத்தில் சில விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும்பட்சத்தில் அதற்கு முதல்வர் பினராயி விஜயன் தான் பொறுப்பேற்க வேண்டும். பினராயி மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகிய இருவரையும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.