அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சிறப்பான தரமான பட்ஜெட்: பியூஸ் கோயலை புகழ்ந்து தள்ளிய அருண் ஜேட்லி 

வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சிறப்பான தரமான பட்ஜெட் என்று பியூஸ் கோயலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:02 am

DIN

புது தில்லி: வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சிறப்பான தரமான பட்ஜெட் என்று பியூஸ் கோயலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவின் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றுள்ளதால், மின்துறைஅமைச்சரான பியூஷ் கோயல் நிதித்துறையினை  கூடுதல் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு, இடைக்கால பட்ஜெட்டைஅவையில் தாக்கல் செய்தார்.

தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.   

இந்நிலையில் வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் சிறப்பான தரமான பட்ஜெட் என்று பியூஸ் கோயலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டானது, பிரதமர் மோடி நாட்டுக்கு அளித்துள்ள கொள்கைகளின் வழியாகச் செல்லும் பயணத்தின் ஓர் முக்கிய அம்சமாகும்.    

இந்த நான்கு வருட செய்லபாடுகளை ஆராய்வதற்கும், மக்கள் முன் உண்மைகளை சமர்ப்பிப்பதற்கும் அரசுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்த பட்ஜெட் தினம் அமைந்துள்ளது.

நாடு எதிர்நோக்கியுள்ள சலுகைகளை சமாளிக்கும் வகையில் சிறப்பான தரமான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள பியூஷ் கோயிலுக்கு பாராட்டுக்கள்.

இது அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக அமைந்துள்ளதுடன், நடுத்தர வர்க்க மக்களின் வாங்கும் திறனை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்பது கேள்விகளுக்கு இடமில்லாத உண்மையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.