சண்டிகார்: பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் மீது எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் டேரா பாபா நானக் பகுதியில் இந்த சம்பவம் புதன்கிழமை காலையில் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் இளம்பெண் ஒருவர் இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளார். இதைக் கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் அந்தப் பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத் திரும்பச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் அதைக் கேட்காமல் தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றார்.
இதன் காரணமாக பாதுகாப்பு படை நடைமுறைகள் படி அந்தப் பெண் மீது படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த அந்தப் பெண் இந்திய எல்லைப்பகுதியில் மயங்கி விழுந்தார்.
உடனே அந்தப் பெண்ணை பாதுகாப்புப் படையினர் டேரா பாபா நானக் பகுதி மருத்துவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக எல்லைப் பாதுகாப்பு படைஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


