ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பூஞ்ச் மாவட்ட ஆட்சியர் ராகுல் யாதவ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குறிப்பிட்ட சில பிரிவினர், மற்ற பிரிவினர் மீதும் பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வன்முறையாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, மாவட்டத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு, மக்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், மாவட்டத்தில் 144 தடை உத்தரவு திங்கள்கிழமை முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் வன்முறையில் ஈடுபடவும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசவும், முழக்கங்கள் எழுப்பவும், ஆயுதங்கள் வைத்திருக்கவும், 5 நபர்களுக்கு மேல் ஓர் இடத்தில் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. இத்தடை உத்தரவையொட்டி, அனைத்து மதுபானக் கடைகளும், மதுக் குடிப்பகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


