நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

துப்புரவுத் தொழிலாளர்களின் காலைக் கழுவிய பிரதமர் மோடி: ஏன்? எங்கே? எதற்கு?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 10:54 am IST


உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

கும்பமேளாவையொட்டி அப்பகுதியில் சுத்தப்படுத்தும் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களை அனைவரையும் மோடி பாராட்டினார்.
 

கும்பமேளாவில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளிகள் 5 பேரின் காலை பிரதமர் மோடி கழுவினார்.

இது பற்றி அவர் கூறுகையில், சுமார் 20 - 22 கோடி மக்கள் கூடும் ஓரிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது மிகப்பெரிய காரியம். இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி தெரிவித்தார்.

Story image

முன்னதாக, திரிவேணி சங்கமத்தில் நீராடிய மோடி, நதிக்கு பால், பழம் கொண்டு அபிஷேகம் செய்து, சிவப்பு நிற ஆடையை புனித நதிக்கு வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.