இந்திய விமானப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அவசர ஆலோசனை

இந்திய விமானப் படையினர், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார்.
இந்திய விமானப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அவசர ஆலோசனை
Updated on
1 min read


இஸ்லாமாபாத்: இந்திய விமானப் படையினர், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு 200 - 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் இன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆலோசனையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர்கள் மற்றும் முன்னாள் தூதர்களும் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com