குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது: வடகிழக்கு மாநில மக்களுக்கு உறுதியளித்த பிரதமர் மோடி  

சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது என்று வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

News image
Updated On :9 ஜனவரி 2019, 5:24 pm IST

சோலாப்பூர்: சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது என்று வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் - 1955 ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  

நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அம்மசோதாவானது  சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போதே இதற்கு அசாமில் எதிர்ப்பு எழுந்தது.  இந்த மசோதாவை செவ்வாயன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்கல் செய்தார்.  விவாதத்துக்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. 

தற்போது மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம் தொடர்ந்து இந்த மசோதாவிற்கு எதிராக அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்  சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவால் உங்கள் உரிமை பாதிக்கப்படாது என்று வடகிழக்கு மாநில மக்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். 

இதுதொடர்பாக மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, 'குடியுரிமை  மசோதாவை தாக்கல் செய்வதால் அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநில மக்களின் உரிமை பாதிக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்' என்று பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.