மோடி, அமித்ஷா ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் போல் தான் செயல்படுவார்கள்: கேஜரிவால்

2019-இல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் ஜெர்மனியில் ஹிட்லர் செயல்பட்டதுபோல் தான் செயல்படுவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 
மோடி, அமித்ஷா ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் போல் தான் செயல்படுவார்கள்: கேஜரிவால்
Published on
Updated on
1 min read


2019-இல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடியும், அமித்ஷாவும் ஜெர்மனியில் ஹிட்லர் செயல்பட்டதுபோல் தான் செயல்படுவார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம், கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தில்லி முதல்வர் கேஜரிவால் பேசுகையில், 

"நரேந்திர மோடியும், அமித் ஷாவும் 2019-இல் ஆட்சி அமைத்தால், அவர்கள் அரசமைப்பை மாற்றி, தேர்தல் அமைப்பை மாற்றி, நாட்டில் இருக்கும் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்தாரோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள். 

பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளில் செய்ய தவறியதை அமித்ஷாவும், நரேந்திர மோடியும் கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ளனர். இவர்கள், ஹிந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஒவ்வொரு சமூகத்தினருக்கு எதிராகவும், ஒருவருக்கொருவருக்கு எதிராகவுமே கிளப்பியுள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தல், யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்பதற்கானதல்ல. அது பாஜகவை வெளியேற்றவேண்டும் என்பதற்கானது" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com