கோவா மாநில பாஜக தொண்டர்களுடன் வரும் 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாட உள்ளார். கோவா மாநில பாஜக வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாட இருப்பது இது 2-ஆவது முறையாகும்.
இதுதொடர்பாக கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடக்கு கோவா நாடாளுமன்ற தொகுதியின் பாஜக வாக்குச்சாவடி தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மாநில தலைநகர் பனாஜியில் தொண்டர்கள் அனைவரும் ஒன்றுகூட உள்ளனர். அவர்களிடம் காணொளி காட்சி மூலமாக பிரதமர் உரையாட உள்ளார்.
மேலும், பனாஜியின் மண்டோவி நதியில் மூன்றாவது பாலத்தை மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வரும் 27-ஆம் தேதி திறந்து வைக்கிறார் என்று கூறினார்.
முன்னதாக, தெற்கு கோவா, சதாரா உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் பாஜக வாக்குச்சாவடி தொண்டர்களுடன் ஜனவரி 20-ஆம் தேதி காணொளி காட்சி வழியாக மோடி உரையாடினார். அதைத் தொடர்ந்து வடக்கு கோவா தொண்டர்களுடன் உரையாற்ற உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!
ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



