ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கருப்பு திரைப்படத்தில் நடித்தது ஏன்? இந்திரன்ஸ் விளக்கம்!

கருப்பு குறித்து இந்திரன்ஸ்...

News image

நடிகர்கள் இந்திரன்ஸ், அனகா ரவி

Updated On :30 மே 2026, 4:44 pm IST

நடிகர் இந்திரன்ஸ் கருப்பு திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.

மேலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி வணிக ரீதியாகவும் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபகரமான படமாக மாறியுள்ளது. நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே இதுவே அதிக வசூலைச் செய்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், இப்படத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் அனகா ரவி ஆகியோரின் நடிப்பும் பெரிதாக கவனம் பெற்றது. தன் மகளுக்கு சிகிச்சையளிக்க போராடும்போது, ஜிபே செய்யத் தெரியாது என உடையும் காட்சியில் இந்திரன்ஸ் பலரையும் கண்கலங்க வைத்தார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் இந்திரன்ஸிடம், ‘கருப்பு திரைப்படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டீர்கள்? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு இந்திரன்ஸ், “இயக்குநர் ஆர்ஜே பாலாஜி என்னிடம் கதை சொன்னபோது என்னுடைய கதாபாத்திரம் குறித்து ஆர்வம் இருந்தது. கேரளத்திலிருந்து தன் பிள்ளைகளின் சிகிச்சைக்காக பல தந்தைகள் சென்னை வருகிறார்கள். அப்படியான ஒரு தந்தையாக நடிக்கும்போது நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது புரிந்தது. ஆனால், அந்த நேரத்தில் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால், கருப்புக்கு சரியான தேதிகளை ஒதுக்க முடியுமா என்கிற நெருக்கடியும் உருவானது. இருந்தும், எப்படியான நாள்களை மாற்றிக்கொண்டு கருப்பு படத்தில் நடித்துவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Indrans has spoken about the film Karuppu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.