எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மகாத்மா நினைவு தினம்: காந்திய சிந்தனை புத்தகங்கள் பாதி விலைக்கு விற்பனை!

தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி (ஜனவரி 30) மும்பையில் இயங்கி வரும் அறக்கட்டளை சார்பில் காந்தியடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆச்சார்ய வினோபா

Updated On :24 ஜனவரி 2019, 1:24 am IST


தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி (ஜனவரி 30) மும்பையில் இயங்கி வரும் அறக்கட்டளை சார்பில் காந்தியடிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆச்சார்ய வினோபா பாவேவின் புத்தகங்கள் பாதி விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மும்பையின் டார்தியோ பகுதியில் உள்ள காந்தி புத்தக நிலையத்திலும், ஹுதாத்மா செளக்கிலும் வரும் 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரையிலும் மும்பை சர்வோதயா மண்டல் (எம்எஸ்எம்) பகுதியிலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. 
மகாத்மாவின் 71ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது மற்றும் வினோபா பாவேவின் ஆங்கிலம், மராத்தி, ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 200 விதமான புத்தகங்கள் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் வைக்கப்படவுள்ளதாக எம்எஸ்எம் மண்டல நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 
பூமிதான இயக்கத்தின் தலைவரான வினோபா பாவே தனது பூமிதான அந்தோலன் அறக்கட்டளை மூலமாக, காந்தியின் எண்ணங்களையும், கருத்துக்களையும், கருத்தரங்குகள், கருத்துப்பட்டறை, பொதுக்கூட்டங்கள் மற்றும் இளைஞர் முகாம்கள் மூலமாக 1952ஆம் ஆண்டு முதல் பரப்பி வந்தார். 
காந்தியடிகளின் சுயசரிதை புத்தகங்கள் ரூ.25க்கே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மகாத்மா காந்தி தேர்ந்தெடுத்து செய்த பணிகள் என்ற 1872 பக்கங்களை கொண்ட நூல் ரூ.300க்கும், வினோபா பாவேயின் கீதையை பற்றி பேசுங்கள் என்ற நூல் ரு.50க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். 
கடந்த ஆண்டு காந்தியின் புத்தகங்கள் 6 நாள்களில் ரூ.4.30 லட்சம் மதிப்பில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.