மூளை அழற்சி நோயால் பிகாரில் உச்சகட்ட அபாய நிலை: மௌனம் கலைத்தார் நிதிஷ் குமார்

பிகாரில் மூளை அழற்சி நோயால் ஏற்படும் மரணங்களால் மாநிலமே உச்சகட்ட அபாய நிலையில் இருப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மூளை அழற்சி நோயால் பிகாரில் உச்சகட்ட அபாய நிலை: மௌனம் கலைத்தார் நிதிஷ் குமார்
Updated on
1 min read


பிகாரில் மூளை அழற்சி நோயால் ஏற்படும் மரணங்களால் மாநிலமே உச்சகட்ட அபாய நிலையில் இருப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை எழுப்பிய நிலையில், முதல்வர் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது உச்சகட்ட துரதிருஷ்டமான நிலை. வெறும் வருத்தத்தைத் தெரிவிப்பது மட்டும் போதாது, இது மிக மிக மோசமான விஷயமாக உள்ளது. இது குறித்து பல ஆலோசனைக் கூட்டங்களையும், விவாதங்களையும் நீண்ட நேரம் நடத்தியுள்ளோம் என்றும் பேரவையில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலைக்குப் பொறுப்பேற்று மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே பதவி விலக வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்கள் வலியுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com