பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வங்கி மோசடி வழக்குகள்: அதிரடியாகக் களத்தில் இறங்கியது சிபிஐ; 12 மாநிலங்களில் சோதனை

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் சிபிஐ நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

News image
Updated On :2 ஜூலை 2019, 9:23 am

PTI


புது தில்லி: நாடு முழுவதும் பல்வேறு வங்கிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வங்கி மோசடி வழக்கில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கும் சிபிஐ நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

சிறப்பு நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்படும் இன்றைய அதிரடி சோதனை 12 மாநிலங்களில் 50 இடங்களில் நடந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக 640 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், அதன் முதலாளிகளின் வீடுகள் என சோதனைக்கு பல இடங்கள் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையானது தில்லி, மும்பை, லூதியானா, தானே, வல்தாட், புனே, கயா, குருக்ராம், சண்டிகர், போபால், சூரத் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.