இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பேருந்து - சரக்கு லாரி நேருக்கு நேர் மோதல்: கர்நாடகாவில் 12 பேர் பலி 

கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்தும்  சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானர்கள்.

News image
Updated On :3 ஜூலை 2019, 12:07 pm

IANS

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் பேருந்தும்  சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியானர்கள்.

கர்நாடகாவின் சிக்கபலாப்பூர் மாவட்டத்திலுள்ளது முருகமல்லா கிராமம். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், சரக்கு லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன . இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த பேருந்துப் பயணிகள் 10 பேர் அருகில் உள்ள சிந்தாமணி நகரத்தில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.