வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கோவா அமைச்சரவையில் புதியவர்களுக்கு இடம்: பழைய கூட்டணிக்கு கும்பிடு போட்ட பாஜக

கோவா அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களான சந்திரகாந்த் கவ்லேகர், ஜெனிஃபர், ஃபிலிப்பே நேரி ரோட்ரிஜியஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ ஆகியோர் இன்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

News image
Updated On :13 ஜூலை 2019, 12:14 pm

PTI


பனாஜி: கோவா அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களான சந்திரகாந்த் கவ்லேகர், ஜெனிஃபர், ஃபிலிப்பே நேரி ரோட்ரிஜியஸ் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ ஆகியோர் இன்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் கடந்த புதன்கிழமை பாஜகவில் இணைந்தனர். 

கோவாவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட ஏதுவாக, பாஜக கூட்டணி கட்சியான கோவா முன்னணி கட்சியைச் (ஜிஎஃப்பி) சேர்ந்த மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்து விலகுமாறு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்ததால், அமைச்சரவையில் இருந்து மூன்று பேரையும் நீக்கி நடவடிக்கை எடுத்தார் முதல்வர். அதேப் போல சுயேச்சை எம்எல்ஏவான ரோஹன் கெளந்த்தேவும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது பாஜகவை சாராத எம்எல்ஏவான கோவிந்த் கௌடே மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

ஜிஎஃப்பி கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், வினோத் பாலிகர் மற்றும் ஜெய்ஷ் சல்கோன்கர் ஆகிய மூன்று பேரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டவர்களாவர்.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர், தற்போது பிற கட்சிகளில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைவதுதான் தேசிய அளவில் டிரெண்டாக உள்ளது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.