தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மத்திய மறைமுக வரிகள் ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு 

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :18 ஜூன் 2019, 10:58 am

IANS

புது தில்லி: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதையடுத்து அரசுத்துறைகளில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

சமீபத்தில் கூட நடத்தைக் குறைபாடு காரணமாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 12 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இவர்கள் மீது லஞ்சம் கேட்டல், நிதி முறைகேடு மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.   

கட்டாய ஓய்வுஅளிக்கப்பட்டவர்களில் இந்தத் துறையின் முதன்மை ஆணையர்கள் மற்றும் ஆணையர்கள் அடங்குவர்.

இந்த 15 அதிகாரிகளில் சென்னை அலுவலகத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹர்ஷா எனும் ஆணையரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.