புது தில்லி: ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு என்று வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றுக் கொண்ட பின்னர், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.
இந்நிலையில் ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு என்று வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஜனாதிபதியின் உரை என்பது பிரதமர் மோடியின் உரையின் மறு ஒளிபரப்பு போன்றுதான் இருந்தது. அவரது பேச்சில் வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி ஆகியவை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனவே இது எந்த ஒரு ஆர்வத்தையும் உண்டாக்காத வெற்றுப் பேச்சாக உள்ளது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பாஜகவின் கோஷத்தை ஆதரிக்கும் வகையில் ஜனாதிபதி பேசியுள்ளார். ஆனால் இந்தியா போன்ற பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த ஒரு நாட்டில் இது சாத்தியம் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


